திருப்பதி மலையில் உள்ள லட்டு விநியோக மையத்தில் நேற்று நள்ளிரவு இரண்டு லட்ச ரூபாய் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகில் உள்ள லட்டு விநியோக மையத்தில் 50க்கும் மேற்பட்ட கவுண்டர்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நிலையில் நேற்று நள்ளிரவிற்கு பின் 36 வது நம்பர் கவுண்டரில் லட்டு விநியோக பணியில் இருந்த நபர் விநியோகத்தை நிறுத்திவிட்டு தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது கவுண்டருக்குள் புகுந்த மர்ம நபர் அங்கு லட்டு விற்பனை செய்தது மூலம் கிடைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டு லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்று விட்டார்.
இன்று காலை சுமார் 5 மணி அளவில் தூங்கி எழுந்து பார்த்தபோது பணத்தை காணவில்லை. இது தொடர்பாக தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினரிடம் அவர் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் அங்கு வந்து சேர்ந்த விஜிலெஸ் துறையினர் கவுண்டரில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது திருட்டு போனது உறுதி செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் திருமலை காவல் நிலையத்தில் விஜிலன்ஸ் அதிகாரிகள் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சிசிடிவி கேமரா பதிவு காட்சிகள் அடிப்படையில் கவுண்டரில் 2 லட்ச ரூபாய் திருடி சென்ற நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.