ஒரே வாரத்தில் மூன்றாவது முறை.. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கெடுபிடி: உயிரிழந்த குழந்தையை பைக்கில் கொண்டு சென்ற தந்தை!!

ஆந்திரா : நாயுடு பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து மகள் உடலை பைக்கில் சொந்த ஊருக்கு கொண்டு சென்ற தந்தையின் செயலால் மீண்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருப்பதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மரணமடைந்த மகன் உடலை நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு பைக்கில் தந்தை கொண்டு சென்ற அவலம் நடைபெற்றது.

அதேபோல் நேற்று தண்ணீரில் மூழ்கி மரணம் அடைந்த மகன் உடலை நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த தந்தை ஒருவர் சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற சம்பவம் நடைபெற்றது.

இந்த நிலையில் திருப்பதி மாவட்டம் நாயுடு பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து தண்ணீரில் மூழ்கி மரணம் அடைந்த மகள் உடலை தந்தை மோட்டார்சைக்கிளில் சொந்த ஊருக்கு கொண்டு சென்ற அவலம் இன்று நடைபெற்றது.

நாயுடு பேட்டை அருகே உள்ள கொத்த பள்ளியில் குட்டையில் தேங்கியிருந்த தண்ணீரில் விழுந்து இரண்டு வயது சிறுமி அக்ஷயா மரணம் அடைந்தார்.

சிறுமி உயிருடன் இருக்கலாம் என்று கருதி அங்கிருந்தவர்கள் நாயுடு பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அக்ஷயாவை பரிசோதித்த மருத்துவர்கள் அட்சயா இறந்து விட்டதாக கூறினர்.

இந்த நிலையில் அட்சையா உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல அவருடைய தந்தை 108 ஆம்புலன்ஸ் உதவியை கோரினார். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர்.
தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அதிக வாடகை கேட்டனர்.

மேலும் ஆட்டோ ஓட்டுநர்களும் ஆட்டோவில் உடலை எடுத்து செல்ல சம்மதிக்கவில்லை. எனவே அக்ஷயாவின் தந்தை தன்னுடைய மகள் உடலை நாயுடு பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து கொத்தப்பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றார்.

கடந்த ஒரே வாரத்தில் மட்டும் இதுபோன்ற சம்பவங்கள் மூன்று முறை நடைபெற்றுள்ளன. ஆனால் அரசும் அதிகாரிகளும் இதனை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். எதிர்க்கட்சிகளுக்கு இது ஒரு அரசியல் நடத்துவதற்கான வாய்ப்பாக மட்டுமே அமைந்துள்ளது.

மூன்று சம்பவங்களிலும் பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர் தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு அவர்கள் கேட்ட தொகையை கொடுக்க இயலாத நிலையில் இருந்தது காரணமாக அமைந்துள்ளது. எனவே ஏழைகளின் நலன் கருதி இதற்கு சரியான தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை ஆந்திராவில் ஏற்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

2 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

4 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

4 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

5 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

6 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

6 hours ago

This website uses cookies.