வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். நேற்று இரவு வயநாட்டில் தங்கினார்கள்.
இன்று காலையில் வயநாட்டில் உள்ள ஒரு ரிசார்ட்டில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இதில் அகில இந்திய காங்கிரஸ் அமைப்புச் செயலாளர்கே.சி. வேணுகோபால், கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், கேரள எதிர்கட்சி தலைவர் சதீசன், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பி.விஸ்வநாதன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனையின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தெந்த வகைகளில் உதவலாம் என்று விவாதித்தனர். இதையடுத்து காங்கிரஸ் சார்பில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக் கொடுக்க முடிவு செய்தனர்.
ஒரே இடத்தில் இடம் வாங்கி அதில் ஒரு குடியிருப்பு போல் வீடுகளை கட்டவும் ஒவ்வொரு வீடும் தலா ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் செலவில் கட்டவும் திட்டமிட்டுள்ளார்கள்.இந்த கூட்டம் முடிந்ததும் ராகுல் காந்தி கலெக்டரை நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது நிலவரம் மற்றும் மீட்பு பணிகள் பற்றியும் கேட்டறிந்தார்.மேலும் காங்கிரஸ் குடும்பத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது பற்றியும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.