கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் திருப்பதி : மண்சரிவு ஏற்படும் அபாயம்.. தீவிர கண்காணிப்பில் தேவஸ்தானம்!!
Author: Udayachandran RadhaKrishnan1 November 2021, 2:31 pm
ஆந்திரா : திருப்பதி மலையில் தொடரும் கனமழையால் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நேற்று காலை முதல் திருப்பதி மலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பக்தர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.
தொடர் கனமழை காரணமாக திருப்பதி மலைப்பாதையில் பாறை சரிவுகள் ஏற்படக்கூடும் என்பதால் தேவஸ்தான நிர்வாகம் மலைப்பாதைகள் இரண்டிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் அறைகளில் இருந்து கோவிலுக்கு செல்வது சாமி கும்பிட்ட பின் மீண்டும் அறைக்கு திரும்பி செல்வது ஆகியவற்றின் போது பக்தர்கள் இடையூறுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
Views: - 409
0
0