ஒப்பந்ததாரர் உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து கர்நாடகா ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஈஸ்வரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அரசு வளர்ச்சி பணிகளை செயல்படுத்துவதற்காக 40% கமிஷன் கேட்டதாக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை அமைச்சர் ஈஸ்வரப்பா மீது அரசு சிவில் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் குற்றம்சாட்டியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, அவர் தங்கியிருந்த விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இறப்பதற்கு முன்பாக, தனது நண்பர்களுக்கு, தனது இறப்பிற்கு அமைச்சர் ஈஸ்வரப்பாதான் காரணம் என்று வாட்ஸ்அப்பில் அனுப்பியிருந்தார்.
இது தொடர்பாக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், அவரை பதவி நீக்கம் செய்யுமாறு முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் இல்லத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கேஎஸ் ஈஸ்வரப்பா, தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். இந்த நிலையில், அவர் இன்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முதலமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் ராஜினாமா கடிதத்தை அவர் கொடுத்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.