ஒப்பந்ததாரர் உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து கர்நாடகா ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஈஸ்வரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அரசு வளர்ச்சி பணிகளை செயல்படுத்துவதற்காக 40% கமிஷன் கேட்டதாக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை அமைச்சர் ஈஸ்வரப்பா மீது அரசு சிவில் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் குற்றம்சாட்டியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, அவர் தங்கியிருந்த விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இறப்பதற்கு முன்பாக, தனது நண்பர்களுக்கு, தனது இறப்பிற்கு அமைச்சர் ஈஸ்வரப்பாதான் காரணம் என்று வாட்ஸ்அப்பில் அனுப்பியிருந்தார்.
இது தொடர்பாக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், அவரை பதவி நீக்கம் செய்யுமாறு முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் இல்லத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கேஎஸ் ஈஸ்வரப்பா, தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். இந்த நிலையில், அவர் இன்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முதலமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் ராஜினாமா கடிதத்தை அவர் கொடுத்தார்.
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
This website uses cookies.