கேரளா : பாலக்காட்டில் தனியார் பேருந்தில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி பேருந்தின் மேற்பகுதியில் ஏறிய பயணிகளுக்கு பேருந்து நடத்துநர் டிக்கெட் எடுக்கும் வீடியோ வைரலாகி சர்ச்சையாகியுள்ளது.
கேரளா மாநிலம் பாலக்காடு நென்மாறா – கோழிக்கோடு வழியாக இயங்கும் தனியார் பேருந்து ஒன்றில் அந்த பகுதியில் நடைபெறும் கம்ப வெடிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்க சென்றவர்கள் , இந்த தனியார் பேருந்தின் உட்புறம் உட்பட பஸ்சின் மேல் பகுதியிலும் அமர்ந்து பயணம் செய்துள்ளனர்.
இவர்களுக்கு நடத்துனர் பஸ்ஸின் மேல் பகுதியில் சென்று டிக்கெட்டும் கொடுத்துள்ளார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி பரவியுள்ளன. தனியார் பஸ்ஸின் ஓட்டுனர் மற்றும் நடத்துனரும் அளவுக்கு மீறி ஏறிய பயணிகளை பஸ்சை விட்டு வெளியேற கேட்டுள்ளனர்.
இருந்தும் பயணிகள் இறங்காததால் ஓட்டுனர் பஸ்ஸின் மேல் புறத்தில் இருந்த பயணிகளுக்கும் மேலே ஏறி டிக்கெட் கொடுத்துள்ளார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலாமனதை தொடர்ந்து பல்வேறு எதிர்ப்பு குரல்களும் எழுந்துள்ளன. இதைத் தொடர்ந்து நடத்துனர் உட்பட ஒட்டுனரின் மேல் கேரளா போக்குவரத்து துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.