பஞ்சாப் ; அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சீக்கியர்களின் வழிபாட்டு தலமான பொற்கோவில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று வழிபடுவது வழக்கம். அந்த வகையில், பெண் ஒருவர் தனது முகத்தில் தேசியக் கொடியை வரைந்து விட்டு, பொற்கோவிலுக்கு செல்ல முயன்றுள்ளார்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர், அந்தப் பெண்ணை உள்ளே செல்லக் கூடாது என்று தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், இது இந்தியா இல்லையா..? என்று கேட்கிறார். அதற்கு அந்த காவலர் இல்லை இது பஞ்சாப் என்று சொல்கிறார்.
இதனால், கடுப்பான அந்தப் பெண் மீண்டும் மீண்டும் இது இந்தியா எல்லை என்று கேட்க, அவரோ இல்லை என்பது போல தலையசைக்கிறார். நடந்த இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்த அந்தப் பெண்ணின் செல்போனை பறிக்க அந்தக் காவலர் பறிக்க முயற்சிக்கிறார்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், அந்த அதிகாரியின் செயலுக்கு பொற்கோயிலை நிர்வகிக்கும் ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி மன்னிப்பு கேட்டுள்ளது. அந்த பெண்ணின் முகத்தில் வரைந்திருந்த சின்னத்தில் அசோக சக்கரம் இல்லாததால் அது இந்திய கொடி அல்ல, அரசியல் கொடியாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.