திரிணமுல் காங்கிரஸ் பிரமுகர் அனுப்ரதா மொண்டல், கால்நடைகளை கடத்திய வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரை காவலில் எடுத்து சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் அசன்சால் மாவட்ட சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜேஷ் சக்கரவர்த்திக்கு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், ‘இந்த வழக்கில் அனுப்ரதா மொண்டலுக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்படவில்லை எனில், உங்கள் குடும்பத்தார் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலி வழக்குப் பதிவு செய்யப்படும்’ என, மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
திரிணமுல் காங்கிரசை சேர்ந்த பப்பா சட்டர்ஜி என்பவரது பெயரில் இந்த கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் அவர் அதை மறுத்துள்ளார். தன் பெயரில் யாரோ போலியாக கடிதம் அனுப்பி உள்ளதாக பப்பா சட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக, பஸ்சிம் வர்த்தமான் மாவட்ட நீதிபதியிடம் சிறப்பு நீதிபதி ராஜேஷ் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தை, கோல்கட்டா உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்து செல்லவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.