கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க பாஜக போராடி வருகிறது. 40 சதவீத கமிஷன் புகார், ஹிஜாப், ஹலால் உணவு பிரச்சனை, தேர்தலில் சிட்டிங் எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த தலைவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுத்தது, எடியூரப்பாவின் அரசியல் ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் பாஜக நெருக்கடி நிலையில் உள்ளது. மேலும் தேர்தலில் கர்நாடகா தலைவர்களில் யாரை முன்நிறுத்துவது என்பதில் பாஜக மேலிடம் குழம்பி போய் உள்ளது.
மாறாக காங்கிரஸ் கட்சியில் பாஜகவை போன்ற சூழல் இல்லை. தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அதோடு பாஜகவின் ஓட்டு வங்கியாக இருக்கும் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த பாஜக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ெஷட்டர் மற்றும் முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவதி உள்ளிட்டவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
இதன் ஒருபகுதியாக தான் முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து போட்டோஷூட் நடத்தியுள்ளனர். இதில் சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் மாறி மாறி ஒருவருக்கொருவர் காங்கிரஸ் கட்சியின் சின்னம் மற்றும் கொடிக்கான அடையாளத்தை சட்டையில் பொருத்துகின்றனர்.
மேலும் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் நெருக்கமாக ஒருவருக்கொருவர் தோள்களில் கைவைத்து சிரித்த முகத்துடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
This website uses cookies.