நாடு முழுவதும் தொடங்கியது யுபிஎஸ்சி தேர்வுகள்… தமிழகத்தில் 5 நகரங்களில் தேர்வெழுத சிறப்பு ஏற்பாடு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 May 2023, 10:50 am
UPSC - Updatenews360
Quick Share

இந்திய குடிமைப்பணிகளுக்கான 2023 ஆம் ஆண்டிற்கான யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஆகிய 5 நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 7 மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு மையங்களில் மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதுவதற்கு ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

9.30 முதல் 11.30 மணி வரை பொதுஅறிவு தேர்வு, பிற்பகல் 2.30-4.30 வரை திறனறிவு தேர்வு, 2 ஆம் தாள் தேர்வும் நடக்கிறது. மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 1,105 பணியிடங்களுக்கு தேர்வு நடக்கிறது.

Views: - 259

0

0