காதல் திருமணத்தால் கலவரமான கிராமம் : கிணற்றில் நீர் அருந்திய சிறுவனை தாக்கிய ஒரு தரப்பு.. இருதரப்பு மோதலால் போலீசார் குவிப்பு!!

ஆந்திரா : விஜயநகர மாவட்டத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரு பிரிவினருடைய சரமாரி மோதல் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் விஜயநகர் மாவட்டம் நெல்லிமர்லா மண்டலம் மலையடா கிராமத்தில் இரு பிரிவினர் உள்ளனர். இன்று ஒரு பிரிவினர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் மற்றொரு பிரிவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் நீர் அருந்தியுள்ளான். இதனைப் பார்த்த ஒரு பிரிவினர் அந்த ஒரு சிறுவனை தாக்கி அனுப்பியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினர் பகுதிக்கு சென்று தாக்குதல் நடத்தினர். இதில் இரு பிரிவினரும் கற்கள் மற்றும் கட்டைகளால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் கிராமம் முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கு வந்த போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதில் எட்டு பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அப்பகுதியில் போலீசார் நடத்திய விசாரணையில் அப்பகுதியில் இருக்கும் இரு பிரிவினருக்கும் இடையே கடந்த மாதம் ஒரு காதல் கலப்பு திருமணம் நடைபெற்றது. இதன் காரணமாக இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்றும் அப்பகுதியில் மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து மேலும் மோதல்கள் ஏற்படும் என்பதால் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். ஒரு காதல் திருமணத்தால் அந்த கிராமமே கலவர பூமியானது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

1 day ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

1 day ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

2 days ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

2 days ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

2 days ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

2 days ago

This website uses cookies.