விஸ்வகுரு தோல்வி அடைந்துள்ளார்… பிரதமர் மோடியை தவறிவிட்டார் : அமைச்சர் உதயநிதி கடும் விமர்சனம்!!
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இம்மாநிலம் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கு சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க பிரதமர் மோடி தவறிவிட்டார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மணிப்பூரில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இணைய சேவை மீண்டும் இரு தினங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டது. அப்போது சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போன மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்கிற தகவல் வெளியாகியது. எனவே மாணவர்கள் தீவிர போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இப்படி இருக்கையில் நேற்று அம்மாநில முதலமைச்சர் பிரனே் சிங்கின் பூர்வீக வீட்டில் அடையாளம் தெரியாத இரண்டு கும்பல்கள் தாக்குதல் நடத்த முயன்றிருக்கிறது.
இதனை பாதுகாப்பு படையினரும், காவல்துறையினரும் முறியடித்துள்ளனர். இந்நிலையில், இங்கு சட்டம் ஒழுங்கை மீட்க பிரதமர் மோடி தவறிவிட்டார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அதாவது, மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை மிகுந்த கவலை அளிக்கிறது. எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறிக்கொள்ளும் ‘விஸ்வகுரு’ மணிப்பூரில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுப்பதில் படுதோல்வி அடைந்துள்ளார்.
இணைய சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதன் மூலம், இரண்டு மெய்தி மாணவர்கள் கொல்லப்பட்டது போன்ற பயங்கரமான சம்பவங்களை அம்பலமாகியுள்ளன. இது முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வன்முறையை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, அரசாங்கம் மீண்டும் இணைய சேவையை நிறுத்தியுள்ளது. மாநில மற்றும் யூனியனில் உள்ள பிஜேபி அரசாங்கங்கள் பொறுப்பேற்று மணிப்பூரைக் காப்பாற்ற வேண்டிய நேரம் இது என்று x சோஷியல் மீடியா தளத்தில் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.