58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு… மொத்தமாக பதிவான வாக்கு சதவீதம் எவ்ளோ தெரியுமா? டாப்பில் மேற்கு வங்கம்!
இந்திய நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஐந்து கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஆறாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று டெல்லி, அரியானா உள்பட ஆறு மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
வாக்குப்பதிவின்போது மக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். 58 தொகுதிகளில் 1 மணி நிலவரப்படி 39.13 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
மேலும் படிக்க: நீர் ஆதாரம் எல்லாமே போச்சு.. கேக்க வேண்டிய CM வாயை மூடி மவுனமா இருக்காரு : போராட்டத்தை அறிவித்த பிஆர் பாண்டியன்!
தொடர்ந்து 3 மணி நிலவரப்படி 49.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில், 5 மணி நிலவரப்படி 57.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
மாநிலம் வாரியாக பீகார் – 52.24 சதவீதம், டெல்லி – 53.73 சதவீதம், அரியானா – 55.93 சதவீதம், ஜம்மு காஷ்மீர் – 51.35 சதவீதம், ஜார்க்கண்ட் – 61.41 சதவீதம், ஒடிசா – 59.60 சதவீதம், உத்தர பிரதேசம் – 52.02 சதவீதம், மேற்கு வங்கம் – 77.99 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதைதொடர்ந்து, 6ம் கட்ட தேர்தலுக்கான இன்றைய வாக்குப்பதிவு சரியாக மாலை 6 மணியளவில் நிறைவுப் பெற்றது.
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
This website uses cookies.