மேற்கு வங்கத்தில் கால்நடை கடத்தல் வழக்கில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பீர்பும் மாவட்டத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் அனுபிரதா மொண்டல். இவர், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளரும் கூட ஆவார்.
இந்நிலையில், பீர்பும் நகரில் உள்ள அனுபிரதா மொண்டலின் இல்லத்திற்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள், கால்நடை கடத்தல் வழக்கில் அவரை கைது செய்தது. அதிகாரிகள் நேராக அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்று, பின்னர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கடந்த 5ம் தேதி கால்நடை கடத்தல் வழக்கில் மொண்டலுக்கு, சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பியது. அதில், கொல்கத்தா நகரிலுள்ள நிஜாம் பேலஸ் பகுதியில் அமைந்த சி.பி.ஐ. அலுவலகத்தில் 8-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவித்து இருந்தது.
கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந்தேதி எல்லை பாதுகாப்பு படையின் முன்னாள் தளபதி ஒருவரை கால்நடை கடத்தல் வழக்கில் சி.பி.ஐ. கைது செய்து இருந்தது. அவரிடம் நடந்த விசாரணையில், இந்த விவகாரத்தில் அனுபிரதா மொண்டலின் தொடர்பு வெளிச்சத்திற்கு வந்தது.
ஏற்கனவே, மேற்கு வங்கத்தில் ஆசிரியர்கள் நியமன ஊழலில் முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளரும், நடிகையுமான ஆர்பிடா முகர்ஜியும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மேற்கு வங்கத்தில் அடுத்த அதிரடியாக முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளரை கால்நடை கடத்தல் வழக்கில் சி.பி.ஐ. கைது செய்திருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
This website uses cookies.