பற்றி எரியும் மேற்கு வங்கம்.. ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை : திரௌபதி முர்மு எடுக்கும் முக்கிய முடிவு.. பரபரப்பு!

பற்றி எரியும் மேற்கு வங்கம்.. ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை : திரௌபதி முர்மு எடுக்கும் முக்கிய முடிவு.. பரபரப்பு!

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது, அந்த நிலையில் அங்குள்ள 24 வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி என்ற கிராமத்தில் கடந்த ஒரு மாததாக பிரச்சனை வெடித்து வருகிறது.

அதற்கு காரணம் ஆளும்கட்சி பிரமுகரான ஷாஜகான் ஷேக், அதாவது அக்கிராமத்தில் உள்ள பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக அவர் மீது பிகார் எழுந்துள்ளது. அதுவும் பட்டியலின வகுப்பை சேர்ந்த பெண்கள் தான் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

இது தவிர பட்டியலின மக்களின் நிலத்தை அபகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து வெளியே சொன்னால் பல்வேறு விளைவுகள் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளதாகவிம் அவர் மீது புகார் எழுந்துள்ளது.

இதனிடையே ஷாஜகான் ஷேக் வீட்டில் கடந்த மாதம் ரேஷன் ஊழல் புகார் தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்த சென்றது. அப்போது அவரது ஆதரவாளர்கள் அமலாக்கத்துறையை தடுத்து தாக்கிய நிலையில் ஷாஜகான் ஷேக்கை தப்பவிட்டுள்ளனர்.

இந்தநிலையில் தலைமறைவாக உள்ள ஷாஜகான் ஷேக் மீது பெண்கள் புகார்கள் கொடுத்து வருகின்றனர். ஆளும்கட்சி நிர்வாகி என்பதால் போலீசாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஷாஜகானின் கூட்டாளியான ஷிபாபிரசாத் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையை போராட்டக்காரர்கள் எரித்ததால் பதற்றம் நீடிக்கிறது.

இதை எதிர்க்கட்சியினர் தங்களுக்கு கிடைத்த ஆயுதமாக, போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குதித்தனர். போராட்டம் வெடித்ததது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று சந்தேஷ்காலி கிராமத்தில் தேசிய பட்டியலின ஆணையத்தில் சேர்ந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு ஏற்பட்ட கொடுமை பற்றி அவர்கள் விசாரித்தனர்.

தேசிய பட்டியலின ஆணையத்தின் தலைவர் அருண் ஹால்தார் மற்றும் உறுப்பினர்கள் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் அறிக்கை ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. அறிக்கையை ஆணையத்தின் தலைவர் அருண் ஹால்தார் ஒப்படைத்தார்.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த தேசிய பட்டியலின ஆணையம் பரிந்துரைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.