எங்கே சென்றது மனிதநேயம்? மனநலம் குன்றிய மூதாட்டியை தரதரவென இழுத்து சென்ற கல்லூரி மாணவர்.. பதற வைக்கும் வீடியோ!!

தெலுங்கானா : மனநலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் வசிக்கும் மூதாட்டியை கல்லூரி மாணவர் ஒருவர் தரதரவென இழுத்து சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ஷாத் நகர் நகராட்சியில் உள்ள வீதி ஒன்றில் மனநிலை பாதிக்கப்பட்ட 70 வயது மூதாட்டி சித்தம்மா யாசகம் எடுத்து வசித்து வருகிறார்.

அவருக்கு அந்த பகுதியில் உள்ள மக்கள் மூன்று வேளையும் உணவு அளித்து வருகின்றனர். இந்த நிலையில் அவருடைய உடலில் ஆங்காங்கே காயங்கள் காணப்பட்டன.

எனவே அந்த பகுதி மக்கள் அந்த மூதாட்டியிடம் என்ன நடந்தது என்று கேட்டபோது யாரோ ஒருவன் என்னை தாக்கி காயப்படுத்தி விட்டான் என்று கூறினார்.

அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை ஆய்வு செய்தபோது அதே பகுதியில் வசிக்கும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் பர்வேஷ் என்பவன் அந்த மூதாட்டியை தரதரவென்று வீதியில் சென்று தாக்கியது தெரியவந்தது.

இதுபற்றி அந்த பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சாத் நகர் போலீசார் கல்லூரி மாணவன் பர்வேஷை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் நடத்திய விசாரணையின் போது அந்த மூதாட்டி என்னை திட்டினார். எனவே அவரை நான் தாக்கினேன் என்று கூறியிருக்கிறான். மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி திட்டியதால் தரதரவென இழுத்து சென்று மாணவன் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.