தெலுங்கானா மாநில முன்னாள் முதல் மந்திரியும் பி.ஆர்.எஸ். கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் கடந்த 3 முறையாக கஜ்வேல் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். சந்திரசேகர ராவ் முதல் மந்திரியாக இருந்த போதும் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள போதும் கஜ்வேல் தொகுதி பக்கம் வரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் கஜ்வேல் தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி தொழிலாளர்கள் சந்திரசேகரராவை காணவில்லை அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என தொகுதி முழுவதும் போஸ்டர்களை ஒட்டினர். மேலும் சாலையில் இறங்கி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.சந்திரசேகர ராவ் அவரது முகாம் அலுவலகம், இந்திரா பார்க், சவுரஸ்தா பஸ் நிறுத்தம், அம்பேத்கர் சதுக்கம், கஜுவேல் நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பார்க்க முடியவில்லை என போஸ்டரில் கூறியிருந்தனர்.
மேலும் காணாமல் போன சந்திரசேகரராவை கண்டுபிடித்து தர வேண்டும் என போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். சந்திரசேகரராவை காணவில்லை என போஸ்டர் ஒட்டிய சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.