தெலுங்கானா மாநில முன்னாள் முதல் மந்திரியும் பி.ஆர்.எஸ். கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் கடந்த 3 முறையாக கஜ்வேல் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். சந்திரசேகர ராவ் முதல் மந்திரியாக இருந்த போதும் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள போதும் கஜ்வேல் தொகுதி பக்கம் வரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் கஜ்வேல் தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி தொழிலாளர்கள் சந்திரசேகரராவை காணவில்லை அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என தொகுதி முழுவதும் போஸ்டர்களை ஒட்டினர். மேலும் சாலையில் இறங்கி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.சந்திரசேகர ராவ் அவரது முகாம் அலுவலகம், இந்திரா பார்க், சவுரஸ்தா பஸ் நிறுத்தம், அம்பேத்கர் சதுக்கம், கஜுவேல் நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பார்க்க முடியவில்லை என போஸ்டரில் கூறியிருந்தனர்.
மேலும் காணாமல் போன சந்திரசேகரராவை கண்டுபிடித்து தர வேண்டும் என போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். சந்திரசேகரராவை காணவில்லை என போஸ்டர் ஒட்டிய சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.