கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்..? ஜோதிடம் சொன்ன ‘பைரவா நாய்’… செல்லப்பிராணியின் ஆருடம் பலிக்குமா..?

Author: Babu Lakshmanan
26 April 2023, 6:31 pm
Quick Share

கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்து பைரவா நாய் ஆருடம் கூறியதை தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கர்நாடகாவில் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளுக்கு இடையே தான் போட்டி நிலவி வருகிறது.

கருத்துக்கணிப்பு படி ஆளும் பாஜகவுக்கு வெற்றி கிடைப்பதில் சந்தேகம் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, கர்நாடக தனியார் தொலைக்காட்சியும், சி.ஓட்டர் நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் 106 முதல் 116 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் பாஜக 79 முதல் 89 தொகுதிகளிலும், குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் 24 முதல் 34 தொகுகளிலும், மற்றவர்கள் 5 தொகுதிகளிலும் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்துடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்? என ‘பைரவா’ என்ற நாய் ஆரூடம் கணித்துள்ளது. கால பைரவேஸ்வரரின் தீவிர பக்தரான மாண்டியாவை சேர்ந்த கோபி என்பவருக்கு சொந்தமான ‘பைரவா’ என்ற நாயின் முன்பு, முதல்வர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோரின் புகைப்படங்களை வைத்து, மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார்? என ஆருடம் கேட்டார்.

அப்போது, குமாரசாமியின் புகைப்படத்தை வாயில் கவ்விய ‘பைரவா’ நாய், அடுத்த முதல்வரை கணித்தது. இந்த நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Views: - 351

0

0