இந்தியா

அயோத்தி விவகாரம் முதல் டெல்லி கலால் வழக்கு வரை.. யார் இந்த சஞ்சீவ் கண்ணா?

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நவம்பர் 11 அன்று பதவியேற்க உள்ளார். இவர் யார் என்பது குறித்து இதில் காணலாம்.

டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் தற்போது பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் நவம்பர் 10ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. எனவே, அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரைக்குமாறு, கடந்த வாரம் மத்திய சட்ட அமைச்சகம் சந்திரசூட்டுக்கு கடிதம் அனுப்பி இருந்தது. இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை சந்திரசூட் பரிந்துரை செய்தார்.

இந்த நிலையில், நாட்டின் உயரிய உச்ச நீதிமன்றத்தின் 51வது புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை பதவியேற்க உள்ளது உறுதி செய்யப்பட்டது. மேலும், வருகிற நவம்பர் 11ஆம் தேதி சஞ்சீவ் கண்ணா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பிறப்பித்துள்ள நிலையில், சஞ்சீவ் கண்ணா, அடுத்ததாக நாட்டின் உயரிய பொறுப்பை வகிக்க உள்ளார்.

கடந்த 1960ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி டெல்லியில் பிறந்த இவர், அங்கு உள்ள பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். இவரது தந்தை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக கடந்த 1985ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர். படிப்பை முடித்த சஞ்சீவ கண்ணா, 1983ஆம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார். இதனையடுத்து, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கினார். தொடர்ந்து, அவர் 2004-ல் டெல்லி அரசின் வழக்கறிஞராக (சிவில்) நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து, டெல்லி உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக 2005ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட சஞ்சீவ் கண்ணா, 2019ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இவ்வாறு தனது உச்ச நீதிமன்ற பணியைத் தொடங்கிய சஞ்சீவ் கண்ணா, தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமை மற்றும் அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் முக்கிய தீர்ப்பினை அளித்தவர்.

இதையும் படிங்க: சென்னையில் நடத்துநர் கொலை.. இறுதிச்சடங்கிற்காக வந்தவருக்கு சிறை!

மேலும், அயோத்தி வழக்கில் ராமர் கோயில் கட்ட தீர்ப்பு வழங்கிய அமர்வு, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளை அனுமதிக்கும் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த அமர்வு,அரசியலமைப்பின் 370வது பிரிவை நீக்குவதை உறுதி செய்த அமர்வில் இடம் பெற்றிருந்தார். அதேபோல், டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் தொடர்புடைய பணமோசடி வழக்கில், சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு, அப்போது டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பரில் டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றார். உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கான ஓய்வு வரம்பு 65 வயது ஆகும். சந்திரசூட்டுக்கு அடுத்ததாக, உச்ச நீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சஞ்சீவ் கண்ணா, 2025ஆம் ஆண்டு மே 13 வரை 6 மாத காலத்துக்கு தலைமை நீதிபதியாக செயல்படுவார்.

Hariharasudhan R

Recent Posts

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

44 minutes ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

2 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

2 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

3 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

3 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

4 hours ago

This website uses cookies.