2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி யாருக்கு? பாஜக ரகசியங்களை கசிய விட்ட சுப்பிரமணியன் சுவாமி!!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை பா.ஜ.க. தற்போது இருந்தே தொடங்கி விட்டது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகளும், சலுகைகளும் வெளியிடப்பட்டன. வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டு உள்ளது பொது மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.
ரெயில்வே துறைக்கு ரூ.2 லட்சத்திற்கும் கூடுதலான நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இதுபோன்று இ-கோர்ட்டுகள், மகளிர் நலன் உள்ளிட்ட பல்வேறு விசயங்களும் பட்ஜெட்டில் கவனத்தில் கொள்ளப்பட்டன.

எனினும், தேர்தலை கவனத்தில் கொண்டே பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது என எதிர்க்கட்சிகள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற நடவடிக்கைகளில் அமளி ஏற்பட்டு அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில், வரவிருக்கிற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கான ரகசியங்களை அக்கட்சியின் முன்னாள் எம்.பி.யான சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டு உள்ளார்.

அதில், இந்தியா மற்றும் சீனா இடையேயான பதற்றம் நிறைந்த எல்லை பகுதியில் படைகள் குவிக்கப்பட்ட சூழலை குறிப்பிட்டு கூறியுள்ளார். இரு நாடுகளுக்கு இடையே ஒரு நீண்டகால பரஸ்பர ஒப்பந்தம் போடப்பட்ட சூழலிலும், சீனா அதனை மதிக்காமல் நடந்து கொண்டுள்ளது.

ஒப்பந்த விதிமீறலில் ஈடுபட்டு உள்ளது. இதனை இந்தியா பலமுறை கடந்த காலங்களில் சுட்டி காட்டியுள்ளது. எனினும், எல்லையில் படைகளை வாபஸ் பெறும் நடவடிக்கைகள், ராணுவ தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை வழியே தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில், சீனாவை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதன் அவசியம் பற்றி பா.ஜ.க. முன்னாள் எம்.பி. சுப்ரமணியன் சுவாமி சுட்டி காட்டி உள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே அசல் எல்லை கோட்டு பகுதியில் 1996-ம் ஆண்டில் பரஸ்பர ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ள நிலையிலும், 2014-ம் ஆண்டுக்கு பின்னர் ஆக்கிரமிப்பு செய்துள்ள நில பகுதியில் இருந்து சீனா படைகளை வாபஸ் பெறும் வரையில், சீனாவுக்கு எதிராக குவாட் அமைப்பை ஒரு ராணுவ கூட்டணியாக மாற்ற இந்தியா பணியாற்ற வேண்டும்.

சீனாவை எதிர்கொள்வதற்கான, இதுவரை வெளியிடப்படாத ரகசிய தகவல்கள் ஏதேனும் பிரதமர் மோடி வைத்திருக்கிறார் என்றால், அவர் தானாக முன்வந்து அவற்றை வெளியிட வேண்டும். அப்படி செய்யும்போது, 2024-ல் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் வெற்றி பெறும் என தெரிவித்து உள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.