ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் துக்கலி மண்டலம் எல்லம் குட்டா தாண்டாவில் மனைவிக்கு விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயன்ற கணவன் நாக்கை கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாராசந்த் நாயக், கர்னூல் மாவட்டம் துக்கலி மண்டலத்தைச் சேர்ந்த புஷ்பாவதியை கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களது மத்தியில் அவ்வப்போது குடும்ப சண்டை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று காலை கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. புஷ்பாவதியை சமாதனம் செய்ய தாராசந்த் நாயக் லிப் டு லிப் கிஸ் கொடுக்க முயன்றார். இதனை தடுக்க மனைவி முயன்ற நிலையில் வலுக்கட்டாயமாக கிஸ் கொடுக்க முயன்றதால் தாராசந்த் நாயக்கின் நாக்கை புஷ்பாவதி கடித்துள்ளார்.
இதனால் பலத்த காயமடைந்த தாராசந்த் நாயக் சிகிச்சைக்காக குத்தி அரசு மருத்துவமனைக்கு சென்றார். பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக அனந்தபுரம் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஜொன்னகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். தன் விருப்பத்திற்கு மாறாக தன்னை தாக்கி முத்தமிட வற்புறுத்தியதால் இவ்வாறு செய்ததாக மனைவி புஷ்பாவதி ஜொன்னகிரி போலீசில் புகார் அளித்தார். கணவரிடம் போலீசார் இன்னும் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
This website uses cookies.