ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் மாவட்டத்தில் ஒரு பெண்ணை மோட்டார் சைக்கிளில் கட்டி இடிபாடுகள் மற்றும் பாறைகள் நிறைந்த தரையில் அவரது கணவர் இழுத்துச் செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த மாதம் படமாக்கப்பட்ட 40 வினாடிகள் கொண்ட வீடியோவில், தாக்குதலை பதிவு செய்யும் நபர் உட்பட மூன்று பேர் காணப்படுகின்றனர், ஆனால் அவர்களில் யாரும் இந்த தாக்குதலை நிறுத்த முன்வரவில்லை.
தாக்குதலுக்குப் பிறகு, ஆண் கீழே இறங்கி, காயமடைந்த பெண்ணின் மீது நிற்கிறார், அவர் கடுமையான வலியால் அழுகிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால், அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு மாதத்திற்கு முன்பு இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.பஞ்சௌடி காவல் நிலைய உதவி சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திர குமார் கூறுகையில் குற்றம் சாட்டப்பட்ட பிரேமராம் மேக்வால் (32) தனது மனைவி சுமித்ராவை தனது மோட்டார் சைக்கிளில் கட்டி பின்னால் இழுத்துச் செல்வதற்கு முன்பு அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அந்த பெண் தற்போது தனது உறவினர்களுடன் வசித்து வருகிறார். ஆனால் இந்த தாக்குதல் குறித்து அந்த பெண் போலீசில் புகார் செய்யவில்லை.
மேக்வால் குடிப்பழக்கம் உள்ளவர் என்றும், அவரது மனைவியை அடிக்கடி தாக்கியதாகவும் அவரது அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
மேலும் அவர் மனைவியை கிராமத்தில் யாரிடமும் பேச விடாமல் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என போலீசார் தெரிவித்தனர். ஜெய்சால்மரில் உள்ள தனது சகோதரியை பார்க்க அந்த பெண் விரும்பியதாகவும் அதனால் கணவர் தனது மனைவியைத் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.