தண்ணீர் குட்டையில் குட்டியை தாக்க வந்த முதலையிடம் இருந்து குட்டியை தாய் யானை போராடி மீட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது பந்திப்புர் புலிகள் சரணாலயம். அங்கு கோடை காலத்தையொட்டை வனவிலங்குகளின் தேவைக்காக குட்டை ஒன்றில் தண்ணீர் தேங்கியிருந்தது. அதில் தனது குட்டியுடன் யானை ஒன்று தண்ணீர் குடிக்க சென்றது.
தண்ணீரைக் கண்டவுடன் கோடை வெயிலை சமாளிக்கும் விதமாக, குட்டி யானை குட்டையில் குதித்து விளையாடத் தொடங்கியது. தாய் யானையும் குட்டி விளையாடுவதை ஆனந்தமாக பார்த்தபடி, தும்பிக்கையால் தண்ணீரை எடுத்து, குட்டியின் மீது தெளித்துக் கொண்டிருந்தது.
அப்போது, எதிர்பார்பாரத விதமாக குட்டையில் பதுங்கியிருந்த பெரிய முதலை ஒன்று, குட்டி யானையை கவ்வி பிடிக்க முயன்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் யானை, உடனடியாக முதலையை காலால் ஆவேசமாக மிதிக்கத் தொடங்கியது. ஆனால், யானையின் கோபத்தை புரிந்து கொண்ட முதலை, நைசாக அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டது.
இதனை அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோவை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், இந்த உலகில் குழந்தை மீது தாயின் அன்பை விட வேறு எதுவும் பெரிதல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.