கேரளா ;திருவனந்தபுரத்தில் ஆண்வேடம் அணிந்து வந்து மாமியாரின் கால்களை மருமகள் உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரத்தை அடுத்த பாலராமபுரத்தைச் சேர்ந்தவர் வாசந்தி. கடந்த 9ம் தேதி பால் வாங்குவதற்காக சென்ற போது, அந்த வழியாக வந்த ஆண் ஒருவர் வழிமறித்து இரும்பு கம்பியால் காலிலும், தலையிலும் தாறுமாறாக தாக்கியுள்ளார். இதில், அவரது கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அங்கிருந்து தாக்கிய நபர் தப்பியோடியுள்ளார். இதையடுத்து, கால் முறிந்த வாசந்தியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்ததில் அதிர்ச்சி காத்திருந்தது. ஆண் வேடமிட்ட பெண் ஒருவர், தாக்குதல் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, வீட்டில் இருந்தவர்களிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணை செய்ததில், தனது கணவனின் சட்டை மற்றும் பேண்டடை அணிந்து கொண்டு, முகமூடியை அணிந்து சென்று வாசந்தியை அவரது மருமகள் சுகன்யா தாக்கிய தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், தனது கணவர் ரெதீஷ்குமார் குடிக்கு அடிமையாகியதாகவும், தினமும் வீட்டிற்கு வந்து தன்னை தாக்கியதாகவும் கூறினார். தனது கணவனின் இதுபோன்ற செயல்களுக்கு அவரது அம்மாவும், தனது மாமியாருமான வாசந்தி ஆதரவு கொடுத்ததாகவும், எனவே, மாறுவேடத்தில் சென்று தாக்கியதாக தெரிவித்துள்ளார். அவரது இந்த வாக்குமூலம் போலீசாரையே கதிகலங்க வைத்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.