ஆந்திரா : கொள்ளையன் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற போது 5 மாத ஆண் குழந்தையை மாடிப் படிக்கட்டுகளில் இருந்து தவறவிட்ட தாயால் குழந்தை பலியானது.
ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ராமச்சந்திராபுரம் பகுதியில் வசிப்பவர் பாரதி. இன்று காலை வீட்டில் மாடியில் இருந்து பாரதி தன்னுடைய 5 மாத ஆண் குழந்தையுடன் கீழே இறங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று அங்கு வந்த கொள்ளையன் ஒருவன் பாரதியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றான். சங்கிலியை கொள்ளையரிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட பாரதி அதிர்ச்சியில் குழந்தையை தவற விட்டார்.
சுமார் 12 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த குழந்தை தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறிக்க முயன்ற கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கு குறித்து விசாரணை நடைபெறுகிறது. தங்க சங்கிலியை பறிக்கும் போது குழந்தையை தவற விட்டு இறந்த சம்பவம் காரணமாக கடப்பாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.