பீகார் அருகே கணவனை இழந்த பெண்ணின் மார்பு வெட்டப்பட்டு, பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹஹைரா மாவட்டம் பஷ்ரஹா கிராமத்தை சேர்ந்தவர் சுலிஹா தேவி (45) என்பவர் கணவரை இழந்து தனியே வசித்து வந்துள்ளார். இவர் நேற்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். கிராமத்தில் உள்ள வயல்வெளிப் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த தேவியின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு, மார்பு வெட்டப்பட்டு, பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை பெருத்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட தேவியின் கணவர் பப்லு சிங்கும், அவரது சகோதரரும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். நிலத்தகராறு காரணமாக 2 பேரும் கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை தொடர்பாக குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அந்த குற்றவாளி கடந்த ஆண்டு ஜாமினில் வெளியே வந்துள்ளார். அந்த குற்றவாளியே தேவியையும் கொடூரமாக கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த குற்றவாளி எங்கு உள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவனை இழந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளியை கைது செய்யக்கோரி தேவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.