திருமணமான முதல் நாள் நடத்திய சோதனையில் கன்னித்தன்மை இல்லாததால், 24 வயது பெண்ணுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
ராஜஸ்தானில் சன்சி எனப்படும் நாடோடி சமூகத்தினர் உள்ளனர். இவர்களின் திருமணத்தில், ‘குக்காடி பிரதா’ என்ற வழக்கம் பாரம்பரியமாக பின்பற்றப்படுகிறது. இதன்படி, பெண்ணுக்கு திருமணம் ஆன உடன் அவரது கன்னித்தன்மை பரிசோதிக்கப்படுகிறது.
இந்நிலையில், பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில், கன்னித்தன்மை இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, கணவர் வீட்டார் பெண்ணை அடித்து, உதைத்து துன்புறுத்தினர்.
ஒரு கட்டத்தில், தான் ஏற்கனவே பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான உண்மையை அந்த பெண் தெரிவித்தார். இது தொடர்பாக, போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளதை போலீசார் உறுதி செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, கணவர் வீட்டார் உள்ளூர் பஞ்சாயத்தை கூட்டினர்.
அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து பஞ்சாயத்து தீர்ப்பளித்தது. மணமான பெண் அடித்து, உதைக்கப்பட்டது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, கணவர் வீட்டார் மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
This website uses cookies.