கேரளா : அசுர வேகத்தில் வந்த இருசக்கர வாகனம், கைக்குழந்தையுடன் சாலையை கடக்க முயன்ற பெண் மீது மோதியதில் குழந்தை தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த கல்லற என்ற பகுதியில் நேற்று மாலை கைக்குழந்தையுடன் சாலையை கடக்க முயன்ற இளம் பெண்ணை, அதி வேகத்தில் வந்த பைக் ஒன்று மோதியுள்ளது. இந்த விபத்தின் போது பெண்ணின் கையில் இருந்த குழந்தை சாலையில் தூக்கி வீசப்பட்டுள்ளது.
அதிவேகத்தில் வந்த பைக் மோதியதில் இளம் பெண்ணின் முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டு, தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும், அவரின் கையில் இருந்து சாலையில் தூக்கி வீசப்பட்ட குழந்தை சிறு சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியது.
இது குறித்து திருவனந்தபுரம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.