சீட்டாக்களுக்கு பெயர் வைக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு : மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!!

இந்தியா வந்துள்ள சிறுத்தைப்புலிகளை காண்பதற்கான போட்டியில் கலந்து கொண்டு முதல் பார்வையாளராகும் வெற்றி வாய்ப்பினை பெறுங்கள் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பிரதமர் மோடி, மனதின் குரல் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அதன்படி, இந்த மாதத்திற்கான மனதின் குரல் நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பானது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசும்போது, சீட்டாக்கள் (சிறுத்தைப்புலி) இந்தியாவுக்கு மீண்டும் வந்ததற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அவற்றை பற்றி பேசும்படி எண்ணற்றோர் குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றனர்.
1.3 கோடி இந்தியர்கள் ஆனந்தத்திலும், பெருமையாலும் நிரம்பியுள்ளனர். சிறுத்தைப்புலிகளை அதிரடி படை ஒன்று கண்காணிக்கும் பணியில் ஈடுபடும். அதன் அடிப்படையில், நீங்கள் எப்போது சிறுத்தைப்புலிகளை பார்வையிடலாம் என்பது முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, சிறுத்தைப்புலிகளுக்கு பெயர் சூட்டுவது மற்றும் அதற்கான பிரசாரத்திற்கு மக்களாகிய உங்களது பார்வைகளை பகிர்ந்து கொள்ளும்படி நான் கேட்டு கொள்கிறேன்.

நமது பாரம்பரிய முறையின்படி அவற்றுக்கு பெயர் சூட்டினால் அது சிறப்புடன் இருக்கும். இதேபோன்று, விலங்குகளை மனிதர்கள் எப்படி நடத்த வேண்டும் என்ற ஆலோசனைகளையும் வழங்குங்கள். இந்த போட்டியில் நீங்களும் பங்கெடுத்து கொள்ளுங்கள்.

சிறுத்தைப்புலிகளை முதன்முறையாக காணும் வாய்ப்பு பெறும் நபர் நீங்களாக கூட இருக்கலாம் என கூறியுள்ளார். தொடர்ந்து அவர், சண்டிகர் விமான நிலையத்திற்கு விடுதலை போராட்ட வீரரான பகத் சிங்கின் பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் கூறியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

1 day ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

1 day ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

1 day ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

1 day ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

1 day ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

1 day ago

This website uses cookies.