கோவை : கோவையில் மேயர் பதவி உட்பட அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளையும் அதிமுக கைப்பற்றும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணித் தெரிவித்துள்ளார்.
கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது., கோவையில் மேயர் பதவி உட்பட அனைத்து நகராட்சி,பேரூராட்சிகளையும் அதிமுக கைப்பற்றும். அதிமுக வெற்றி பெற்றுவிடும் என்ற பயத்தில் திமுகவினர் தொடர்ந்து அராஜக செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாங்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியதன் அடிப்படையில், ஆட்சியர் அறிக்கைவிட்டு வெளியூர் ஆட்கள் இருக்ககூடாது என்று சொல்லியிருக்கிறார். ஆனாலும்,இன்னும் கோவையின் பல்வேறு இடங்களில் வெளியூர் ஆட்கள் இருக்கிறார்கள். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அதிமுக வெற்றி பெறும் வார்டுகளில் கூட திமுக வெற்றி பெற்றதாக அறிவிக்குமாறு அவர்கள் கூட்டம் நடத்தி முடிவு செய்துள்ளனர். ஒவ்வொரு வாக்கு சாவடிமையத்திலும் தேர்தல் அலுவலர்களும் ,காவலர்களும் நேரடியாக கண்கானிக்க வேண்டும் என அவர் கூறினார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.