‘கொன்று புதைத்து விடுவேன்’…அதிமுகவினருக்கு மிரட்டல் விடுக்கும் போலீசார்: கோவை மாவட்ட ஆட்சியரிடம் எஸ்.பி.வேலுமணி புகார்..!!

கோவை: கோவை மாநகர போலீசார் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டு அதிமுக தொண்டர்களை மிரட்டி வருவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் பொதுமக்களுக்கு தி.மு.க.,வினர் நேற்று ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட பரிசு பொருட்களை விநியோகம் செய்து வந்தனர். இதனை தொடர்ந்து அதிமுக செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் உட்பட அதிமுகவினர் இதனை கண்டித்தனர்.

இந்த சூழலில், கல்யாணசுந்தரம் உட்பட அதிமுகவினர் ஒன்பது பேரை கைது செய்த போலீசார் ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு அவர்களை அழைத்து வந்து அமர வைத்தனர். தேர்தல் விதிகளை மீறி பரிசுப் பொருட்களை விநியோகித்தவர்கள் மீது வழக்கு பதியாமல் அதிமுக தொண்டர்கள் மீது போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறி ராமநாதபுரம் காவல் நிலையத்தை எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜூனன், பி.ஆர்.ஜி.அருண்குமார் மற்றும் கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் தொண்டர்களுடன் வந்து முற்றுகையிட்டனர்.

இதனிடையே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், ” கோவை மாவட்டம் முழுவதும் திமுகவினர் ரவுடிகளை கொண்டு தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். சட்டத்திற்குப் புறம்பான வேலைகளை செய்யும் போது அதனை எதிர்த்து கேள்வி கேட்கும் பொது மக்கள் மற்றும் அதிமுகவினரை அச்சுறுத்தி வருகின்றனர்.

நேற்று திமுகவினர் ரவுடிகள் மூலம் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பண விநியோகத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து புகார் அளித்த பேராசிரியர் கல்யாணசுந்தரம் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததுடன் அவருடன் 8 அதிமுக தொண்டர்களும் கண்ணியமற்ற முறையில் தரையில் அமர வைத்து தரக்குறைவான வார்த்தையில் பேசி “கொன்று புதைத்து விடுவேன்” என்று போலீசார் மிரட்டியுள்ளனர்.

அமைதிப் பூங்காவாக திகழும் கோவை மாவட்டத்தில் வாழும் பொதுமக்களுக்கும் வாக்காளர்களுக்கும் தற்போது திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் ரவுடிகளின் செயல்பாடுகளால் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க வேண்டிய காவல்துறை திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு கோவை மாவட்டத்தில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

2 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

3 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

3 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

4 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

5 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

5 hours ago

This website uses cookies.