கோவை: குனியமுத்தூர் பகுதியில் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக திமுகவினர் கொண்டு வந்த ஹாட்பாக்ஸ் குவியலை பொதுமக்கள் பிடித்து பறக்கும்படையிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குணியமுத்தூர் சுகுணாபுரம் பகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக திமுகவை சுகுணாபுரம் பகுதியை சேர்ந்த கிருபாகரன் என்பவரது வீட்டிற்கு சிறிய சரக்கு ஆட்டோவில் கரூரை சேர்ந்தவர்கள் ஹாட்பாக்ஸ்களை கொண்டு வந்துள்ளனர்.
இதையறிந்த பொதுமக்கள் வாகனத்தை தடுத்து நிறுத்தி பிரச்சினையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தகவல் அறிந்த கோவை குணியமுத்தூர் காவல் நிலைய போலிசாரும் , பறக்கும் படையினரும் சம்பவ இடத்திற்கு வந்து வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டுவந்தனர்.
இந்த நிலையில் தகவல் அறிந்த அதிமுக தொண்டர்கள் சம்பவ இடத்திலும், காவல் நிலையத்திலும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கோவை மாவட்டம் முழுவதும் திமுகவின் பொறுப்பாளர்கள் வீட்டில் பரிசு பொருட்களை திமுகவினர் குவித்து வைத்துள்ளதால், திமுக பொறுப்பாளர்களின் அனைவரது வீடுகளிலும் உடனடியாக சோதனை செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.