இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் 2022 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டமும், 2023 ஆம் ஆண்டு இரண்டாம் இடம் பிடித்த அணி குஜராத் டைட்டன்ஸ். சிவிசி கேப்பிட்டல் பார்ட்னர்ஸ் என்ற தனியார் நிறுவனம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் உரிமையாளராக உள்ளது. இந்நிறுவனம் பெரும்பாலான பங்குகளை விற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான கவுதம் அதானியின் அதானி குழுமம் மற்றும் டொரென்க் குழுமம் சிவிசி கேப்பிட்டல்ஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அணியில் பெரும்பான்மை பங்குகளை தக்கவைத்துக் கொள்ளும் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி உள்ளது.
எனினும், அதானி குழுமம் மற்றும் டொரென்ட் குழுமம் குஜராத் அணியில் அதிக பங்குகளை வாங்க ஆர்வம் செலுத்துவதாக தெரிகிறது. தற்போதைய மதிப்பீட்டின் படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் மொத்த மதிப்பு 1 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரத்து 363 கோடியே 25 லட்சம் துவங்கி அதிகபட்சம் 1.5 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 12 ஆயிரத்து 544 கோடியே 87 லட்சத்து 50 ஆயிரம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக 2021 ஆம் ஆண்டு சிவிசி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் இந்த அணியை ரூ. 5 ஆயிரத்து 625 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.