தூங்கி கொண்டிருந்த சாலையோர ஏழைகளுக்கு தெரியாமலேயே பணம் வைத்த ஆப்கானிஸ்தான் வீரர்… நெகிழ வைத்த வீடியோ!!!
நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அட்டகாசமான திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது.
லீக் சுற்றில் நடந்து முடிந்த 9 ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான் 4 போட்டிகளில் வெற்றி பெற்றது. குறிப்பாக அந்த அணி சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வென்றது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில், வெற்றியை நூலிழையில் கோட்டை விட்டது.
லீக் போட்டிகள் அனைத்தையும் முடித்துக் கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி தற்போது தாயகம் திரும்ப தொடங்கியுள்ளது. இதற்கிடையே அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ரஹ்மானுல்லா குர்பாஸ் அகமதாபாத் நகரில் சாலையோர ஏழைகளுக்கு நள்ளிரவில் பண உதவி செய்துள்ளார்.
இந்த சம்பவம் நடந்தபோது சுற்றிலும் யாரும் இல்லாத சூழல் காணப்பட்டுள்ளது. யாரோ ஒரு நபர் தூரத்தில் நின்று மொபைல் போனில் ஜூம் செய்து பண உதவி வழங்கும் காட்சியை படம் பிடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பலரும் ரஹ்மானுல்லா குர்பாஸிற்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் கூறியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.