கடந்த சில காலமாக பார்மில் இல்லாமல் தவித்த வெங்கடேஷ் ஐயர், நடப்பு ஐபிஎல் சீசனில் தன்னுடைய அதிரடி ஆட்டத்திற்கு திரும்பி உள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் மூலம், கொல்கத்தா அணிக்காக விளையாடிய வெங்கடேஷ் ஐயர், யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பாக செயல்பட்டார்.
இதனால் வெங்கடேஷ் ஐயருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துவிட்டது. எனினும் அதன் பிறகு காயம், பார்ம் அவுட் போன்ற காரணத்தால், இந்திய அணியில் தமது இடத்தை இழந்தார். கடந்த சீசனில் 12 போட்டியில் மட்டும் விளையாடிய வெங்கடேஷ் ஐயர், வெறும் 182 ரன்கள் மட்டுமே அடித்தார்.
எனினும் நடப்பு சீசனில் வெங்கடேஷ் ஐயர் தனது பழைய பார்மை மீட்டு எடுத்தார். பஞ்சாப்க்கு எதிராக 34 ரன்களும், பெங்களூருக்கு எதிராக 3 ரன்களும் எடுத்த வெங்கடேஷ் ஐயர், குஜராத்துக்கு எதிராக 83 ரன்களை விளாசி ரசிகர்களுக்கு டிரீட் கொடுத்தார். இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸக்கு எதிராக வெங்கடேஷ் ஐயர் தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்த போட்டியில் இன்னொரு முக்கிய நிகழ்வு என்னவென்றால், சச்சின் மகன் அர்ஜுன் களமிறங்கியதுதான். முதல் ஓவரை சற்று கடினமாக வீசினார். பின்னர் இரண்டாவது ஓவரில் 12 ரன்கள் கொடுத்தார். மொத்தம் 2 ஓவரில் 17 ரன்களை கொடுத்திருந்தார், ஆனால் அதன் பிறகு அவருக்கு பந்து வீச வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.