ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இன்று ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் இந்திய அணி நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேரம் முடிவில் 164 ரன்கள் எடுத்ததிலிருந்து இன்று ஐந்தாம் நாள் நடத்தை தொடங்கியது.
விராட் கோலி மற்றும் அஜிங்கியா ரஹானே இன்னிங்சை தொடங்கினர். விராட் கோலி 49 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அதன் பிறகு களம் இறங்கிய ஜடேஜா வந்த வேகத்தில் ரன் ஏதும் எடுக்காமல் அதே ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
பொறுமையுடன் விளையாடிவந்த ரஹானே ஸ்டார்க் வீசிய பந்தில் அடிக்க முயன்று விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி 46 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை அடுத்து களமிறங்கிய ஷார்துல் தாக்குரும் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்தடுத்து இறங்கியவர்களும் ஆட்டமிழக்க இந்தியா 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனால் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா தரப்பில் நேத்தன் லியோன் 4 விக்கெட்களும், போலண்ட் 3 விக்கெட்களும், ஸ்டார்க் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் முதன்முறையாக ஆஸ்திரேலிய அணி ஐசிசியின் அனைத்து வித கோப்பைகளையும் வென்றுள்ள அணி என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.