தற்போது பேட்டிங்கில் கலக்கி வரும் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் குறித்து ஆஸ்திரேலியா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் புகழ்ந்து பேசியது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ‘மிஸ்டர் 360 டிகிரி’ என போற்றப்படும் வீரர் சூர்யகுமார் யாதவ். தனது அசாத்திய பேட்டிங்கால் ஐசிசியின் டி20 தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சிறப்பாக ஆடி வரும் அவர், இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவதுடன், பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறார்.
நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் ஆறு போட்டிகளில் 239 ரன்களை குவித்து அவர் அசத்தி இருந்தார். அதை தொடர்ந்து, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் மூன்றாவது முறையாக தொடர் நாயகன் விருதை வென்றிருக்கிறார். அவரது இந்தப் பேட்டிங் ஃபார்மை பார்த்து உலக நாடுகளே மிரண்டு போயுள்ளன.
இந்த நிலையில், சூர்யகுமார் யாதவை அதிரடி ஆட்டத்திற்கு புகழ்பெற்ற ஆஸ்திரேலிய அணியின் கிளென் மேக்ஸ்வெல் வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார்.
வருங்காலத்தில் பிக் பாஷ் லீக்கில் சூர்யகுமார் ஒப்பந்தம் செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த போது, “அவரை வாங்குவதற்கு எங்களிடம் போதுமான பணம் இல்லை. அவரை வாங்குவதற்கான பணத்தை ஈட்ட கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ஒப்பந்தத்தில் உள்ள ஒவ்வொரு வீரரையும் நாங்கள் நீக்க வேண்டும்” என புன்னகையுடன் தெரிவித்தார்.
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
This website uses cookies.