இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் சேர்த்தது.
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டாக்காவில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி, பந்துவீசிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள், வங்கதேச அணியை திணறடித்தனர்.
வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அனமுல் (11), லிட்டன் தாஸ் (7) ஆகியோரின் விக்கெட்டை சிராஜ் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து, ஷாண்டோ (21), ஷகிப் அல் ஹசன் (8), ரஹீம் (12), அஃபிப் ஹுசேன் (0) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால், 19 ஓவர்களில் 69 ரன்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து வங்கதேச அணி தடுமாறியது. பின்னர், 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மகமுதுல்லா, மெஹிதி ஹாசன் இணை, சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தது.
இந்திய பவுலர்களும் இந்த பார்ட்னர்ஷிப்பை முறிக்க பல வழிகளை கையாண்டனர். ஆனால், ஏதும் கைகொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் இருவரும் அரைசதம் அடித்த நிலையில், மகமுதுல்லா 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர் விக்கெட்டை இழந்தாலும், மறுமுனையில் மெஹிதி ஹாசன் தனது வேகத்தை குறைக்கவில்லை.
பரபரப்பாக ஆடிய அவர் போட்டியின் கடைசி பந்தில் சதமடித்து, அணியின் ஸ்கோரையும் வெகுவாக உயர்த்தினர். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் சேர்த்தது. கடைசி வரை ஆட்டமிழக்காத மெஹிதி ஹாசன் 100 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுக்களும், சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற மெஹிதி ஹாசன் முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.