சென்னை : உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்செனை தோற்கடித்து தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார்.
இணைய வழியாக நடக்கும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா என்னும் 16 வயது சிறுவன் பங்கேற்றார். முதல் 7 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், 8வது போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்செனை எதிர்கொண்டு விளையாடினார்.
ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்டிய பிரக்ஞானந்தா, 39வது நகர்த்தலில் கார்ல்சென்னை வீழ்த்தி வெற்றி பெற்றார். தொடர்ந்து தோல்வியடைந்த நிலையிலும், உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சென்னை தோற்கடித்து உலகத்தையே தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார் பிரக்ஞானந்தா.
இவர் 2013ல் நடந்த 8 வயதுக்குட்பட்டோருக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசியவர், பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவத்தின்…
பயமூட்டும் வில்லன் தமிழ் சினிமா வில்லன் நடிகர்களில் மிகவும் டெரர் ஆன வில்லனாக வலம் வந்தவர் ஆனந்த்ராஜ். குறிப்பாக பெண்களிடம்…
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், உலகிலேயே இந்த தீவிரவாதத்தை தடுக்க வேண்டும், எந்த நாட்டிலும் தீவிரவாதம் இருக்கக்…
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் முடிவடைந்து ஐந்தாம்…
வாட்டர்மிலன் ஸ்டார் இன்ஸ்டாகிராம் ரீல்ஸின் மூலம் தமிழ் இணையவாசிகளின் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டாக்டர் திவாகர். “கஜினி” திரைப்படத்தில் சூர்யா…
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். அதை தவிர, திமுகவில் அண்மையில் இணைந்து பணியாற்றி வருகிறார்.…
This website uses cookies.