இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. பயிற்சி போட்டியில் பங்கேற்றிருந்த ரோகித் சர்மா, 3வது நாளான நேற்று பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் செய்ய களமிறங்கவே இல்லை. இந்திய அணி 364/7 ரன்களுக்கு சென்ற போதும், ரோகித் வரவில்லை.
போட்டி முடிந்த பிறகு ரோகித் சர்மாவுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட போது, பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
குறைந்தபட்சம் அடுத்த 5 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜூலை 1 நடக்கவிருக்கும் டெஸ்ட் போட்டியையும் தவறவிடலாம்.
இந்திய அணியில் ஏற்கனவே கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகிவிட்டார். தற்போது கேப்டன் ரோகித் சர்மாவும் விலகுவது பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. இங்கிலாந்துடனான முந்தைய 4 போட்டிகளிலும் ரோகித் சர்மா தான் இந்தியாவின் அதிக ரன் ஸ்கோரர். 4 போட்டிகளில் 368 ரன்களை அடித்தார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பயோ பபுள் விதிமுறைகள் பின்பற்றப்படாது என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ரோகித் சர்மா, கோலி உள்ளிட்ட பல வீரர்களும் இங்கிலாந்து நகரங்களில் ஜாலியாக சுற்றி வந்தனர். எனவே இதுதான் ரோகித்திற்கு தொற்று பரவ காரணமா என சந்தேகம் கிளம்பியுள்ளது. ஏற்கனவே விராட் கோலிக்கும் கொரோனா உறுதியானதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.