சூதாட்டத்தில் தோனி.. அவதூறு பரப்பிய ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. நடந்தது என்ன?

சூதாட்டத்தில் தோனி.. அவதூறு பரப்பிய ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. நடந்தது என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, 2013 ஐபிஎல் சூதாட்டட் விவகாரத்தில் தொடர்புடையதாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் என்பவர் குற்றம் சாட்டி இருந்தார். அப்போது சூதாட்ட வழக்கை விசாரிக்கும் குழுவில் சம்பத் குமார் பொறுப்பில் இருந்தார்.

ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் கிரிக்கெட் வீரர் தோனிக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருக்கிறது என கூறியிருந்தார். அதன் பிறகு தன் மீதான சூதாட்ட புகாருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தோனி வழக்கு தொடர்ந்து இருந்தார். சூதாட்ட விசாரணை அறிக்கை விவரங்களை பொதுவெளியில் வெளியிட கூடாது என உயர்நீதிமன்றம் தடை விதித்து இருந்தது.

அதனை தொடர்ந்தும், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சூதாட்டத்தில் தோனிக்கும் தொடர்பு இருப்பதாக கூறி இருந்தார் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார். இதனை அடுத்து தோனி தரப்பில் இருந்து ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் மீது தோனியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து கூறியதற்காக 100 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட ஈடு வழக்கு தொடரப்பட்டது. மேலும் நீதிமன்ற உத்தரவுகளை மீறி விசாரணை அறிக்கையை வெளியிட்டது தொடர்பாகவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டனர். இதனை அடுத்து, தனக்கு மேல்முறையீடு செய்ய அவகாசம் வேண்டும் எனவும் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் அனுமதி கோரியிருந்தார். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு, அவருக்கான 15 நாள் சிறை அடுத்த 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக கூறி உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.