ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு பிறகு தோனி சொன்ன தகவலை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தோனி மீதான அன்பை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். சென்னையில் நடந்த போட்டிகளை மட்டுமல்லாமல் வெளி மைதானங்களில் நடந்த ஆட்டங்களில் கூட மஞ்சள் படையை காண முடிந்தது.
அந்த வகையில், அகமதாபாத்தில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் சென்னை ரசிகர்கள் குவிந்திருந்தனர். காரணம் என்னவென்றால், தோனிக்கு இது கடைசி ஐபிஎல் சீசனாக இருந்து விடுமோ..? என்ற அச்சத்தில் தான்.
இந்த நிலையில், நேற்று நடந்த போட்டியில் குஜராத்தை கடைசி பந்தில் தோற்கடித்து 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை சென்னை அணி வென்றது. இதைத் தொடர்ந்து, தோனி ஓய்வு முடிவை அறிவித்து விடுவாரோ..? என்று அவரது பேச்சை ரசிகர்கள் எதிர்பார்த்து கேட்டனர்.
ஆனால், தோனி கூறியதாவது ;- மிகவும் உணர்வுப்பூர்வமான இறுதிப்போட்டியாக இந்த போட்டியை பார்க்கிறேன். எனது கண்கள் குளமாகின. என்னுடைய ஓய்வை அறிவிக்க இதுதான் சிறந்த தருணம். ஆனால், எல்லா இடங்களிலும் எனக்கு கிடைத்த அன்பு அளவு கடந்தது. இங்கிருந்து இத்துடன் கிளம்பி விடுவது எளிதானது.
ஆனால் கடினமான விஷயம் என்னவென்றால், 9 மாதங்கள் கடினமாக உழைத்து மற்றொரு ஐபிஎல் விளையாட முயற்சிப்பது. அது என்னிடம் இருந்து கிடைக்கும் பரிசாக இருக்கும். அது என்னுடைய உடலுக்கு எளிதானதாக இருக்காது. ஓய்வு குறித்து யோசிக்க இன்னும் 8 முதல் 6 மாதம் இருக்கிறது. சென்னை அணி ரசிகர்கள் தங்கள் அன்பையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திய விதத்திற்காக, இது அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய ஒன்று. தற்போது நான் சென்னை மைதானத்தில் இருப்பதை போலவே உணர்கிறேன், எனக் கூறினார்.
இதன்மூலம், தோன அடுத்த சீசனிலும் விளையாட வாய்ப்பு இருப்பதால் அதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.