சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக தோனி அறிவித்துள்ளார்.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 26ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்தத் தொடருக்கான மெகா ஏலம் அண்மையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பல்வேறு அணிகள் முக்கிய வீரர்களை எடுத்திருந்தாலும், சென்னை அணியின் முக்கிய பேட்ஸ்மேனான டூபிளசஸிஸை பெங்களூரூ அணி ஏலத்தில் எடுத்ததுதான் அனைவரின் கவனத்தையும் பெற்றது.
சென்னை அணி தன்னை தக்க வைத்துக் கொண்டாலும், பெரிய தொகை தனக்கு கொடுக்க வேண்டாம் என்று தோனி கேட்டுக் கொண்டது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் யாரும் எதிர்பார்த்திடாத போது, ஓய்வை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் தோனி. இதனால், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தோனி தொடருவாரா..? அல்லது ஓய்வை அறிவித்து அதிர்ச்சி கொடுத்துவிடுவாரா என்று ரசிகர்கள் சீரற்ற மனநிலையில் இருந்தனர்.
இப்படியிருக்கையில், தோனி இன்னும் இரு வருடங்களுக்கு சென்னை அணிக்காக விளையாடுவார் என்று கூறி அணியின் நிர்வாகம் ஆறுதல் அளித்தது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடங்க இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், சென்னை அணி ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சென்னை ரசிகர்களுக்கு பெரும் இடியை இறக்கியது போல் ஆயிற்று.
அதேவேளையில், தோனிக்கு பதிலாக, ஜடேஜா கேப்டன் பொறுப்பை ஏற்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இது சற்று ஆறுதல் அளித்தாலும், தோனியின் கேப்டன்ஷிப்பிற்கு சென்னை அணியின் ரசிகர்கள் அடிமையாக இருப்பதே நிஜம். இதுபோன்ற ரசிகர்களால் இந்த அறிவிப்பை ஜீரணித்துக் கொள்ள முடியும் என்பது நிதர்சணமான உண்மை.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.