இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இமாலய ஸ்கோரை குவித்துள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் நேற்று தொடங்கியது. அதில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 218 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 4 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
தொடர்ந்து பேட் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் ஷர்மா, ஜெய்ஷ்வால் ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. ஜெய்ஷ்வால் 57 ரன்னில் ஆட்டமிழந்தாலும், கேப்டன் ரோகித் ஷர்மா (103), கில் (110) சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். தொடர்ந்து வந்த படிக்கல் (65), சர்பிராஷ் கான் (56) சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர்.
விக்கெட்டுக்கள் ஒருபுறம் சரிந்த நிலையில், 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குல்தீப் யாதவ் (27), பும்ரா (19) நங்கீரம் போல நிலைத்து நின்று ஆடினர். இதனால், 2வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் சேர்த்துள்ளது. இதன்மூலம், 255 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.