இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இமாலய ஸ்கோரை குவித்துள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் நேற்று தொடங்கியது. அதில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 218 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 4 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
தொடர்ந்து பேட் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் ஷர்மா, ஜெய்ஷ்வால் ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. ஜெய்ஷ்வால் 57 ரன்னில் ஆட்டமிழந்தாலும், கேப்டன் ரோகித் ஷர்மா (103), கில் (110) சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். தொடர்ந்து வந்த படிக்கல் (65), சர்பிராஷ் கான் (56) சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர்.
விக்கெட்டுக்கள் ஒருபுறம் சரிந்த நிலையில், 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குல்தீப் யாதவ் (27), பும்ரா (19) நங்கீரம் போல நிலைத்து நின்று ஆடினர். இதனால், 2வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் சேர்த்துள்ளது. இதன்மூலம், 255 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.