இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இமாலய ஸ்கோரை குவித்துள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் நேற்று தொடங்கியது. அதில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 218 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 4 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
தொடர்ந்து பேட் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் ஷர்மா, ஜெய்ஷ்வால் ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. ஜெய்ஷ்வால் 57 ரன்னில் ஆட்டமிழந்தாலும், கேப்டன் ரோகித் ஷர்மா (103), கில் (110) சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். தொடர்ந்து வந்த படிக்கல் (65), சர்பிராஷ் கான் (56) சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர்.
விக்கெட்டுக்கள் ஒருபுறம் சரிந்த நிலையில், 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குல்தீப் யாதவ் (27), பும்ரா (19) நங்கீரம் போல நிலைத்து நின்று ஆடினர். இதனால், 2வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் சேர்த்துள்ளது. இதன்மூலம், 255 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.