டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக பாபர் அசாம் ,முகமது ரிஸ்வான் களமிறங்கினர். தொடக்க விக்கெட்டுக்கு 29 ரன்கள் சேர்த்த நிலையில் ரிஸ்வான் 15 ரன்களில் ,சாம் கரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.தொடர்நது களமிறங்கிய முகமது ஹாரிஸ் ஆதில் ரஷீத் பந்துவீச்சில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஷான் மசூத் அதிரடி காட்டினார்.மறுபுறம் நிலைத்து ஆடி ரன்கள் குவித்த பாபர் அசாம் 32 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து அந்த இப்திகார் அகமது ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி தடுமாறியது. பின்னர் அணியின் ஸ்கோர் 121 ரன்னாக இருந்த போது சிறப்பாக விளையாடிய ஷான் மசூத் 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக விளையாடி வந்த ஷதாப் கான் ரன்கள் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8விக்கெட் இழப்பிற்கு 137ரன்கள் எடுத்தது.இங்கிலாந்து சார்பில் ஆதில் ரஷீத் 2 ,சாம் கரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தொடர்ந்து 138ரன்கள் எடுத்தால் டி20 உலகக்கோப்பையை வெல்லலாம் என்ற நிலையில் இங்கிலாந்து அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் ,அலெக்ஸ் ஹாலெஸ் களமிறங்கினர்.ஷஹீன் ஷா அப்ரிடி வீசிய முதல் ஓவரில் 1 ரன்களுக்கு அலெக்ஸ் ஹாலெஸ் வெளியேறினார்.
மறுபுறம் பட்லர் அதிரடியாக விளையாடினார் . பின்னர் பில் சால்ட் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார், தொடர்ந்து பட்லர் 32 ரன்களுக்கு ஹாரிஸ் ரவுப் பந்துவீச்சில் வெளியேறினார்.பின்னர் பென் ஸ்டோக்ஸ் , ஹார்ரி புரூக் இருவரும் நிலைத்து ஆடி ரன்கள் சேர்த்த்னர்.புரூக் 20 ரன்களில் ஷதாப் கான் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
தொடர்ந்து ஸ்டோக்ஸ் ,மொயீன் அலி இருவரும் அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணியை வெற்றி நோக்கி அழைத்து சென்றனர். சிறப்பாக விளையாடிய ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்தார்.
இறுதியில் 19ஓவர்களில் 5விக்கெட் இழப்பிற்கு 138ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது,இந்த வெற்றியால் இங்கிலாந்து அணி 2022 டி20 உலக கோப்பையை வென்றது.இது அந்த அணி வெல்லும் 2வது டி20 உலகக்கோப்பை ஆகும்.
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…
திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
This website uses cookies.