டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக பாபர் அசாம் ,முகமது ரிஸ்வான் களமிறங்கினர். தொடக்க விக்கெட்டுக்கு 29 ரன்கள் சேர்த்த நிலையில் ரிஸ்வான் 15 ரன்களில் ,சாம் கரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.தொடர்நது களமிறங்கிய முகமது ஹாரிஸ் ஆதில் ரஷீத் பந்துவீச்சில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஷான் மசூத் அதிரடி காட்டினார்.மறுபுறம் நிலைத்து ஆடி ரன்கள் குவித்த பாபர் அசாம் 32 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து அந்த இப்திகார் அகமது ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி தடுமாறியது. பின்னர் அணியின் ஸ்கோர் 121 ரன்னாக இருந்த போது சிறப்பாக விளையாடிய ஷான் மசூத் 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக விளையாடி வந்த ஷதாப் கான் ரன்கள் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8விக்கெட் இழப்பிற்கு 137ரன்கள் எடுத்தது.இங்கிலாந்து சார்பில் ஆதில் ரஷீத் 2 ,சாம் கரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தொடர்ந்து 138ரன்கள் எடுத்தால் டி20 உலகக்கோப்பையை வெல்லலாம் என்ற நிலையில் இங்கிலாந்து அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் ,அலெக்ஸ் ஹாலெஸ் களமிறங்கினர்.ஷஹீன் ஷா அப்ரிடி வீசிய முதல் ஓவரில் 1 ரன்களுக்கு அலெக்ஸ் ஹாலெஸ் வெளியேறினார்.
மறுபுறம் பட்லர் அதிரடியாக விளையாடினார் . பின்னர் பில் சால்ட் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார், தொடர்ந்து பட்லர் 32 ரன்களுக்கு ஹாரிஸ் ரவுப் பந்துவீச்சில் வெளியேறினார்.பின்னர் பென் ஸ்டோக்ஸ் , ஹார்ரி புரூக் இருவரும் நிலைத்து ஆடி ரன்கள் சேர்த்த்னர்.புரூக் 20 ரன்களில் ஷதாப் கான் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
தொடர்ந்து ஸ்டோக்ஸ் ,மொயீன் அலி இருவரும் அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணியை வெற்றி நோக்கி அழைத்து சென்றனர். சிறப்பாக விளையாடிய ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்தார்.
இறுதியில் 19ஓவர்களில் 5விக்கெட் இழப்பிற்கு 138ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது,இந்த வெற்றியால் இங்கிலாந்து அணி 2022 டி20 உலக கோப்பையை வென்றது.இது அந்த அணி வெல்லும் 2வது டி20 உலகக்கோப்பை ஆகும்.
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
This website uses cookies.