கடந்த வாரம் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு தற்போது வெளியிட்ட அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு, ஐபிஎல போட்டியில் சென்னை அணிக்காக விளையாடி வந்தார். கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரோடு, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட அவர், ஆளும் ஒய்எஆர் காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியது.
அதன்படியே, கடந்த வாரம், அதாவது டிசம்பர் 28ம் தேதி ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதன்மூலம், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும், குண்டூர் அல்லது மசூலிப்பட்டினத்தில் அவர் போட்டியிடலாம் என்றும் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில் இணைந்த ஒரு வாரத்திலேயே அக்கட்சியில் இருந்து விலகுவதாக அம்பத்தி ராயுடு அறிவித்துள்ளார். அரசியலில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கட்சியில் சேர்ந்த 9 நாட்களிலேயே அக்கட்சியில் இருந்து அம்பத்தி ராயுடு விலகி இருப்பது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரிடைய அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், அம்பத்தி ராயுடுவுக்கு அரசியல் ரீதியாக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும், வேறு கட்சிகளின் மிரட்டலுக்கு ஆளாகியிருக்கக் கூடும் என்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கூறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.