தற்பொழுது நடைபெற்று வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 65-வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா – பிரியம் கார்க் களமிறங்கினார்கள். இதில் 9 ரன்கள் அடித்து அபிஷேக் சர்மா தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைதொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி, பிரியம் கார்குடன் இணைந்து அதிரடியாக ஆடத்தொடங்கினார். இந்த கூட்டணியால் அணியின் ஸ்கொர் உயர, அதிரடியாக ஆடிவந்த பிரியம் கார்க், 42 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழக்க, அவருக்கு பின்னால் அதிரடியாக ஆடிவந்த ராகுல் திரிபாதி 71 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய நிகோலஸ் பூரான் சிறப்பாக ஆடி 32 ரன்கள் எடுத்து வெளியேற, அவரைதொடர்ந்து ஐடென் மார்க்கம் 2 ரன்களுக்கும், வாஷிங்டன் சுந்தர் 9 ரன்கள் அடித்து வெளியேறினார்கள். இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்துள்ளது.
194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணி துவக்க வீரர்கள், ஐதராபாத் அணி பந்துவீச்சாளர்களை திணறடித்தனர். அபாரமாக விளையாடி ரோகித் ஷர்மா 48 ரன்னில் வெளியறே, மறுமுனையில் இருந்த இஷான் கிஷான் 43 ரன்னில் அவுட் ஆனார்.
இதையடுத்து சாம்ஸ் 15 ரன்னில் வெளியேற, திலக் வர்மாக 8 ரன்னில் அவுட் ஆனார். ஆனால் டிம் டேடிவிட் அதிரடி சரவெடி ரன்கள் அடித்தார். 18 பந்துகளுக்கு 46 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இதையடுத்து வந்த சஞ்சய் யாதல் டக் அவுட் ஆக, கடைசி ஓவரில் 19 ரன் தேவைப்பட்டது. இறுதியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியடைந்தது.
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
This website uses cookies.