16-வது ஐபிஎல் தொடரின் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் குஜராத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி குஜராத் அணியை முதலில் பேட் செய்ய அழைத்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணியில் தொடக்க வீரர்கள் சாஹா மற்றும் கில் அதிரடியாக விளையாடி நல்ல தொடக்கம் அமைத்துக்கொடுத்தனர்.
சிறப்பாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாஹா 81 ரன்களுக்கு(10 போர்கள், 4 சிக்ஸர்கள்) ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்டிக் பாண்டியா, கில்லுடன் சேர்ந்து இருவரும் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் என அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து விளையாடிய கில் தனது அரைசதம் கடந்தார். மறுபுறம் ஹர்டிக் பாண்டியா 25 ரன்களில் க்ருனாலிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
முடிவில் குஜராத் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக கில் 94ரன்களும், மில்லர் 20 ரன்களும் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.