நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் வெளியிட்ட அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதியில் வெளியேறியதைத் தொடர்ந்து, கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டி கடந்த 18ம் தொடங்கிய நிலையில், முதல் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.
நேற்று நடந்த 2வது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முந்தைய கேப்டன் ரோகித் ஷர்மாவை விட சற்று மாறுபட்டு யோசித்து, ஆடும் லெவனில் வீரர்களை களமிறக்கினார். அதாவது, மூன்று ஆல் ரவுண்டர்கள் மற்றும் மூன்று வேக பந்துவீச்சாளர்களை கொண்டு ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து அணியை எதிர்கொண்டார்.
இதற்கு நல்ல பலனும் கிடைத்தது. குறிப்பாக, ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா 4 விக்கெட்டுக்களையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
இந்த நிலையில், வெற்றி குறித்து ஹர்திக் பாண்டியா பேசியதாவது :- அணியில் இருந்த அனைவரும் வெற்றிக்கு முக்கிய பங்கு ஆற்றினர். சூரியக்குமார் யாதவ் தன்னுடைய ஸ்பெஷல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நாங்கள் 170 அல்லது 175 ரன்கள் தான் அடித்திருப்போம். ஆனால் சூரிய குமாருடைய வித்தியாசமான ஆட்டத்தால் இலக்கு இன்னும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டது.
பந்துவீச்சாளர்கள் இன்றைய ஆட்டத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டனர். ஆடுகளம் ஈரமாக இருந்த நிலையிலும் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். கேப்டனாக அணியில் இன்னும் நிறைய பந்துவீச்சு தெரிந்த வீரர்கள் இடம்பெற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். என்னுடைய இந்த யுக்தி எப்போதும் பலன் தராது. இருப்பினும் அணியில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் பந்து வீச தெரிந்திருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.
கடைசி ஆட்டத்தில் எத்தனை பேருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எனக்கு தெரியாது ஏனென்றால் ஒரு போட்டி தான் எஞ்சி இருக்கிறது .ஆனால் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பது எனது நிலைபாடு, எனக் கூறினார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.