விளையாட்டு

வாழ்வா? சாவா? இந்தியாவின் அரையிறுதியை நிர்ணயிக்கும் நியூசிலாந்து!

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி வாய்ப்பை தற்காலிகமாக இழந்திருக்கும் இந்தியா, நியூசிலாந்து அணியின் தோல்வியை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

துபாய்: வளைகுடா நாடான துபாயில் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஏ பிரிவில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் உள்ளன. அதேபோல் பி பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய விளையாடி வருகின்றன.

இதன் லீக் ஆட்டங்கள் முடியும் தருவாயில் உள்ளது. இதுவரையிலான ஆட்டத்தில் இரண்டு ஆட்டங்களில் அடுத்தடுத்து வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்த வெற்றியை, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா பெற்றது.

ஆனால், முதலில் நியூசிலாந்து அணியிடமும், நேற்றைய முக்கியமான ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அணியான ஆஸ்திரேலிய அணியிடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது.

இதையும் படிங்க: ஹர்திக் பாண்டியாவுடன் விவாகரத்து…. யூடியூபருடன் ஊர் சுற்றும் நடிகை நடாஷா – வீடியோ!

இருப்பினும், 0.322 என்ற நிகர ரன் ரேட் என்பதன் அடிப்படையில் இந்திய அணி தொடர்ந்து 2வது இடத்திலேயே நீடிக்கிறது. இந்த நிலையில் தான், ஏ பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் நியூசிலாந்து அணி கட்டாயம் தோற்றால் மட்டுமே இந்திய அணி அரையிறுதி ஆட்டத்திற்குள் நுழையும்.

அது மட்டுமல்லாமல், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்யுமானால், 53 ரன்களுக்கு குறைவான வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வெல்ல வேண்டும். அதேநேரம், பாகிஸ்தான் இரண்டாவதாக பேட்டிங் இறங்கினா, 11 ஓவர்களுக்குப் பின்பு வெற்றி இலக்கை அடைய வேண்டும்.

இவ்வாறு நிகழுமானால், பாகிஸ்தான் அணியின் நிகர ரன் ரேட் இந்திய அணிக்கு இணையாக உயராது. அதேபோல், நியூசிலாந்து அணியின் நிகர ரன் ரேட் இந்திய அணியை விட குறைவாகவே இருக்கும் என்பதால், நிகர ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணியை அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை பெறும்.

இப்படிப்பட்ட மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்டுள்ள இந்த ஆட்டம், இன்று இரவு 07.30 மணிக்கு துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…

1 day ago

செல்ஃபோனை 3 நாட்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்த சமந்தா? அவருக்குள்ள இப்படி ஒரு யோசனையா?

டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு…

1 day ago

கஞ்சா வாங்க ஒடிசா போன தமிழக இளைஞர்? தாய்க்கு வந்த போன் கால் : ஷாக் சம்பவம்!

திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…

1 day ago

ரேஸ் காருக்குள் குழந்தையை வைத்து விளையாட்டு காட்டிய AK? இணையத்தில் வெளியான கியூட் வீடியோ!

ரேஸர் அஜித்குமார் அஜித்குமார் தற்போது உலக நாடுகள் பலவற்றில் கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். சில…

1 day ago

முதல் நாளிலேயே குப்புற கவிழ்ந்த ஃபீனிக்ஸ்? வீழான்னு சொல்லிட்டு இப்படி விழுந்து கிடக்குறீங்களே!

பீனிக்ஸ் விழான்? விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “பீனிக்ஸ்”. இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…

1 day ago

அஜித் கொலைக்கு பின் தனிப்படையை கலைத்துள்ளார் CM.. ஆனால் நிகிதா : கூட்டணி கட்சி பிரமுகர் பரபரப்பு!

அஜித் குமார் கொலைக்கு பிறகு தனிப்படையை அரசு கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது.மடப்புரத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்க: திமுக…

1 day ago

This website uses cookies.